மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று (மே. 9) காலை நான்கு மாசி வீதிகளிலும் கோலாகலமாக வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. காலை 6 10 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் இன்று மதியம்
12 15க்கு சுவாமி தேரும் 12 25 க்கு அம்மன் தேரும் கீழ மாசி வீதியில் உள்ள தேரடி நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது தேரினை வடம் பிடித்து இழுத்த இளைஞர்கள் உற்சாகமாக கைத்தட்டி மகிழ்ந்து விடை பெற்று சென்றனர்.