மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேற்று (09.01.2025) கோ.புதூர், கூடல்புதூர் மற்றும் திடீர்நகர் காவல்நிலையங்கள் சார்பாக RC பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஆண்டனி மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் பேருந்து நிலையத்தில், பெண்கள் பாதுகாப்பு, காவலன் செயலியின் முக்கியத்துவம் மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் காவல்துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.