மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி (வயது 72). அதேபகுதியில் காய்கறிக்கடை வைத்து நடத்தும் லட்சுமணன் என்பவர் கிருஷ்ணசாமிக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது ஏ.டி.எம் கார்டை காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது 15ஆம் தேதியன்று கிருஷ்ணசாமியின் செல்போனுக்கு நகைக்கடை (ராம்குமார் ஜுவெல்லர்ஸ்) பெயரில் 15 மற்றும் 16ஆம் ஆகிய தேதிகளில் 2 லட்சத்து 80ஆயிரத்து 810 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து கிருஷ்ணசாமி கடைசியாக லட்சுமணனின் கடையில் வைத்து பையை எடுத்தது ஞாபகம் வந்த நிலையில் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த லட்சுமணன் மற்றும் அவரது தோழி நாகேஸ்வரி ஆகிய இருவரும் 17ஆம் தேதி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் கிருஷ்ணசாமியிடம் பேசிய லட்சுமணன் "நான்தான் உங்கள் பர்ஸை எடுத்து அதில் எழுதியிருந்த பின் நம்பரை வைத்து நகையை வாங்கி அதை அடகு வைத்துவிட்டோம்" என கூறியதோடு புகார் அளிக்க வேண்டாம் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து மதுரை எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காய்கறிக்கடைக்காரர் மற்றும் நாகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன