மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம், அண்ணா நகர், விளக்குத்தூண், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், திருநகர், புதூர் என 24 காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு குறை தீர்வு முகாம் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த முகாமில் காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளர்களை சந்தித்தபோது:
காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த மனுக்களை விசாரணைக்கு எடுக்கப்பட்டு மனுதாரர் எதிர்மனுதாரர் வரவழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. 265 நிலுவையில் இருந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. புதிதாக 25 மனுக்கள் பெறப்பட்டு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குடும்ப பிரச்சினை, கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, போலி பத்திரம், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தல் உள்ளிட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தீர்வு பெற்றவர்களிடம் அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறோம். இடபிரச்சினை போன்ற மனுக்களுக்கு நீதிமன்றம் சென்று தீர்வு பெற்றிட அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.
பைக் ரேஸ் சம்பந்தமாக இதுவரை புகார் வரவில்லை. நாங்களும் (போலீசாரும்) இது போன்ற சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகிறோம். அப்படி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.