மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, பரவை செக்காரூரணி, ஊமச்சிகுளம், அழகர்கோவில், வரிச்சூர், கருப்பாயூரணி, திருமங்கலம், கல்லுப்பட்டி, சேடப்பட்டி, பேரையூர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
பகல் பொழுதில் கடுமையான வெப்பநிலை நிலவினாலும், மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையால், தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. மதுரை நகரில் அண்ணா நகர் பகுதிகளில், மருதுபாண்டியர் தெரு , வீரவாஜி தெரு, கோமதிபுரம் சௌபாக்கியா தெரு , சித்தி விநாயகர் கோவில் தெரு, குளம் போல காட்சியளிக்கின்றன.
தெருவில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால், இரவு நேரங்களில் அவ்வழியா செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், சாலைகள் மோசமாக இருப்பதால், தேங்கியுள்ள மழை நீரில் பொதுமக்கள் தவறி விடுகின்ற நிலை ஏற்படுகிறது. ஆகவே, சாலைகளையும் விரைவில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.