மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள், மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திமுகவினர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.