மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.
இதில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை முகாமில் 300க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.