கட்சி கொடியினை டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார்

654பார்த்தது
மதுரை மாநகர் விளாங்குடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி கொடியினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஏற்றி வைத்து பின்னர் உரையாற்றிய போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் போது அம்மா ஆட்சியை தரவில்லை அம்மாவின் தொண்டர்களுக்கு துரோகம் தான் செய்தார். தவறாக ஆட்சி செய்ததால் ஆட்சியை இழந்துள்ளார் அம்மாவின் தொண்டர்களை ஒன்றிணைக்கவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. பழனிச்சாமி தவறாக கிடைத்த பணத்தினால் இப்போது கட்சியை கையகப்படுத்தி வைத்துள்ளார் ஒரு சில சுயநலவாதிகளின் கைகளில் அம்மாவின் கட்சி கிடைக்கின்றது அதை மீட்டெடுக்கவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அணியும் ஒன்றிணைந்துள்ளோம் எங்கள் பக்கம் நாயம் உள்ளது தவறான பாதையில் செல்லும் பழனிச்சாமி இடமிருந்து அம்மாவின் கட்சியை மீட்டெடுக்கவே நாங்கள் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம்.

வருங்காலத்தில் பழனிச்சாமியின் பண பலத்தை எல்லாம் முறியடித்து துரோகத்தை எல்லாம் முறியடித்து அம்மாவின் உண்மையான தொண்டர்களின் கையிலே இந்த இயக்கத்தை ஒப்படைக்க நாங்கள் ஒன்றிணைந்து உள்ளோம் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி