மீனாட்சிஅம்மன் கோயிலில் கணினி கோளாறு; காத்திருந்த பக்தர்கள்

62பார்த்தது
மீனாட்சிஅம்மன் கோயிலில் கணினி கோளாறு; காத்திருந்த பக்தர்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கடந்த 2018ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்களின் செல்போன்களை பாதுகாத்து பராமரிக்க கோயில் வளாகம் நுழைவாயில் பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது.

இதில் பத்து ரூபாய் செலுத்தி செல்போன்களை வைத்து விட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனிடையே கோயில் கிழக்கு கோபுரம் அருகே அமைக்கப்பட்ட செல்போன் பாதுகாப்பு மையத்தில் திடீரென நேற்று (அக்.,2) இரவு நேரத்தில் கணினி வேலை செய்யாமல் பழுது அடைந்ததால் பக்தர்களின் செல்போன்களை பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

இதனால் ஏராளமான பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக வழங்குவதற்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். நீண்ட நேரம் முயற்சித்தும் கணினி மற்றும் இணையதள கோளாறு காரணமாக நீண்ட நேரமாக செல்போனில் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து தற்காலிகமாக டோக்கன்கள் வழங்கப்பட்டு செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க கூடிய நிலையும், சிலர் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி