சாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் பெண் சிசுவின் உடல்

68பார்த்தது
மதுரை மாநகர் மகபூப்பாளையம் அன்சாரி நகர் 7ஆவது தெரு கோவில்பிள்ளை காலனி பகுதியில் சாலையை ஒட்டி பிறந்து சில நாட்களான பச்சிளம் குழந்தை உடல் கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டபோது சிசு உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் சிசுவின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. பெண் சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்ட உள்ள நிலையில் பெண் சிசுக்கொலை நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து S. S காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது இதேபோன்று சமூக நலத்துறை மூலமாக பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளின் விவரங்கள் கேட்டறியப்பட்டு அதன் மூலமாக விசாரணை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலயே சட்டவிரோதமாக பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதா? என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று பெண் சிசு கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி