மதுரை மாநகராட்சி இராஜா முத்தையா மன்றத்தில் மாநகராட்சி பள்ளி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் புத்தாக்கம் மேஜிக் ஷோவினை மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், இ. ஆ. ப. , ஆகியோர் இன்று (15. 03. 2025) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
இதில் துணை மேயர் தி. நாகராஜன் , கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர் , மாமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் , ஆசிரியர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.