மாட்டுத்தாவணி பகுதியில் நீண்ட நாள் நோய்வாய்பட்டவர் விஷம்குடித்து தற்கொலை.
மதுரை மாட்டுத்தாவணி எதிரே உயர்நீதிமன்ற அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாரதிராஜா 41. இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாரதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி ஹேம சிவரஞ்சனி கோ புதூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.