மதுரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி உள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்காத வகையில் மழை நீர் வடிகால்களை பராமரிக்க வேண்டும் தண்ணீரை தேங்காமல் வடிந்து செல்ல உரிய நட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளனர்.