மதுரையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மதுரை ரயில்வே கோட்ட பகுதியில் பூட்டிய ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகளில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் ரயில்வே கேட் முன்பாக இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இதுபோன்ற விபத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் மீறி மோதும் வாகனங்கள் பறிமுதல் மற்றும் அபராதம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.