மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ், மாணவிகளுக்கு மாத ஊக்கத் தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி, அவர் பேசியதாவது:பெண் கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இதில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1, 000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் முக்கியமான திட்டமாக உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 92 கல்லூரிகளைச் சேர்ந்த 7, 340 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெற்று வருகின்றனர்.தற்போது, அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கும் வகையில், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 5, 509 மாணவிகள் மாத ஊக்கத் தொகை பெறுவர் என்றார்.மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. வெங்கடேசன், துணை மேயர் தி. நாகராஜன், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை இணை இயக்குநர் ஜெயலட்சுமி, டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.