ஆயுதங்களுடன் 5 வாலிபர்கள் கைது

84பார்த்தது
ஆயுதங்களுடன் 5 வாலிபர்கள் கைது
மதுரை, அவனியாபுரம் போலீசார் ரோந்து சென்றபோது, மருதுபாண்டியர் சிலை அருகே வாளுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்கள் சிக்கினர். விசாரணையில் பெருங்குடி ஆதிசிவன் நகர் சிவனேசன் மகன் சிவகார்த்திக் (23), திருநெல்வேலி வீர கேரளம் புதூர் நடுத்தெரு முருகன் மகன் சுகுமார் (19) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெருங்குடி பர்மா காலனியில் வாளுடன் சுற்றிய இருவரும் அவனியாபுரம் போலீசாரிடம் சிக்கினர்.

அதேபகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் விக்னேஸ்வரன்(24), தங்கராஜ் மகன் சதீஸ்வரன் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், கூடல்புதூர் போலீசார் ரோந்து சென்றபோது, பைக்கில் வாளுடன் வந்த வாலிபர் சிக்கினார். விசாரணையில் அவர் வி. கரிசல்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுக்ரீவன் (22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி