மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்தி நகர் எனும் பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்து காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி வகுப்புகளை புறக்கணித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தால் அப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.