குருவித்துறையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

84பார்த்தது
குருவித்துறையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பநாயக்கன்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையால் பத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுக்குள் சென்று தாய் மகன் இருவரையும் கொலை வெறிதாக்குதல் நடத்தியதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குருவித்துறை பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி