மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டத்தை போன்று, தென்கரை கிராமத்தில் நடைபெற்ற இந்த தேரோட்டம் அனைவரையும் கவர்ந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தின் சிறப்பம்சமாக, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் வடத்தை பெண்கள் மட்டுமே பிடித்து இழுத்தனர்.
எந்த ஊரிலும் காண முடியாத அளவிற்கு திரளான பெண்கள் ஒன்று திரண்டு தேரின் வளத்தை பிடித்து இழுத்துச் சென்றனர். ஆரவாரமான ஆட்டம், பாட்டுகளுடன், தண்ணீர் பிச்சை எடுத்தும் பக்தர்கள் தேரை உற்சாகமாக இழுத்தனர். மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு தேர்களையும் பெண்களே இழுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். தென்கரை கிராமத்தின் நான்கு ராதை வீதிகளிலும் தேர் பவனி வந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். கோவில் நிர்வாகத்தின் சிறப்பான ஏற்பாட்டில் இந்த திருத்தேரோட்டம் வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேரோட்டத்தை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தென்கரையில் திரண்டிருந்தனர்.