மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (31) என்பவர் அரிசிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் (மார்ச் 12) இரவு சோழவந்தான் அருகே உள்ள ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்கு அரிசி மூடை இறக்க சென்ற போது அங்கு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிட்டதும் அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சமயநல்லூர் மகளிர் போலீசார் செல்லப்பாண்டி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.