மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கல்லூரியில் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட காவல்துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம். அதன்கோட்டாசான் முத்தமிழ் கழகம், ரோஜாவனம் டிரஸ்ட் மற்றும் விவேகானந்த கல்லூரி இணைந்து உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான போதை கருத்தரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு செயலர் சுவாமி வேதானந்த குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். சிவசுப்பு. இன்றைய சமூகத்தில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள், இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவதையும் எடுத்துக் கூறி போதைப் பொருட்களை எங்கேனும் விற்பனை செய்தால் 10581 என்ற எண்ணுக்கு அழைக்கவும் என்றார். இந்நிகழ்வில், மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர். அரவிந்த், மதுரை மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கச் செய ஏ. ராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.