நுரையீரல் புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன. புகையிலை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் காற்று மாசுபாடு காரணமாக தற்போது புகை பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. காற்று மாசுபாடு, அதிக போக்குவரத்து, தொழில்துறை புகை உள்ள இடங்களில் பயணிப்பவர்களுக்கு நுரையீரல் கடுமையாக சேதமடையக்கூடும். இது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.