தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பல பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வறண்ட காற்றின் ஊடுருவலால் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நாளை (டிச.24) வந்தடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று (டிச. 23) மற்றும் நாளை (டிச.24) தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.