ஒவ்வொரு நொடியும் நமது வாழ்க்கையில் நிச்சயம் இல்லாதது என விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருதுகள் வழங்கும் விழா மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 13) மூன்றாவது கட்டமாக நடைபெறுகிறது. அப்போது, குஜராத் விமான விபத்து குறித்த விஷயத்தை பேசிய விஜய், "அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை" என குறிப்பிட்டு பேசினார். குஜராத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடதக்கது.