உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் வழக்கறிஞர்கள் சிலர் விவசாயியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசன்பூர் நீதிமன்ற வளாகத்தில் விவசாயிக்கும் வழக்கறிஞர் யாமீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. யாமீன் தனது சக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து விவசாயியை கண்மூடித்தனமாக தாக்கினார். அப்போது தடுக்க முயன்ற மற்றொரு விவசாயியும் கொடூரமாக தாக்கப்பட்டார். அவர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.