தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரிக்குள் 24 வயது மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒருவர் எடுத்த வீடியோ ஆபாச இணையதளத்தில் பரப்பப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 'சட்ட மாணவி பாலியல் வன்கொடுமை வீடியோ', 'கொல்கத்தா பாலியல் வன்கொடுமை MMS', போன்ற சொற்களை பயன்படுத்தி இணையத்தில் தேடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.