சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதாக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். "தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.