கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (52) தொழிலா ளியான. இவர் சம்பவம் அன்று வீட்டின் அருகே உள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது தவறி கீழே விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.