கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பாக நடைபெற்ற அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை, வெள்ளி விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, நேற்று அன்று வழங்கினார். உடன் மாவட்ட மைய நூலக அலுவலர் அர. கோகிலவாணி, மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் வெ. கமலேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.