கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ. 27 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , முன்னிலையில் இன்று 01. 08. 2024 துவக்கி வைத்தார். உடன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.