கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளன. இந்த நிலையில் குந்தாரப்பள்ளி பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் பயனற்று உள்ளது. பயன்பாட்டில் இல்லாததால் கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும் புதர் மண்டியும் காணப்படுகிறது. உடனடியாக கட்டிடத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.