கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் வருடாந்திர செயற்குழு கூட்டம் நேற்று தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் நடந்தது.
இதில் 2025ம் ஆண்டு அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மகளிர் மட்டும் பங்கேற்கும் வகையில் முதலாவது மரபு நடை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு காப்பாளர் கோவிந்தராஜ், பலர் கலந்து கொண்டனர்.