கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அங்கம்பட்டி அடுத்த குண்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி. இவரது மனைவி அபிஷால்மியா (25). இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜலபதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினையால் மனமுடைந்த அபிஷால்மியா சம்பவம் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.