கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைபெறுகிறதா என்று அந்தந்த காவல் நிலையப் போலீசார் தினமும் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் வேப்பனப்பள்ளி, மகராஜகடை, பேரிகை பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை செய்ததாக பயாஷ் பாஷா (55), கனகராஜ் (38), ராஜகோபால் (67), அசோக் (45) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.