பாம்பாறு அணையில் தண்ணீர் திறப்பு.

77பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம்,
பாம்பாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்று தெரிவித்தது, பாம்பாறு நீர்த்தேக்கம் 1983-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாம்பாறு நீர்த்தேக்கத்தின் முழு நீர்மட்ட உயரமான 19. 68 அடி. இதன் முழு கொள்ளளவு 280 மி. க. அடி ஆகும். பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024 - 2025 ஆண்டு (பசலி 1434) ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக 20. 03. 2025 முதல் 120 நாட்களுக்கு அரசு ஆணையின்படி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் 12 கிராமங்கள் மூலம் 2501 ஏக்கரும் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் 4 கிராமங்கள் மூலம் 1499 ஏக்கரும் மொத்தம் 16 கிராமங்கள் 4000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெருகின்றது.
முதல் மண்டலத்திற்கு 0 கி. மீ - 11. 725 கி. மீ. IR, IIL மற்றும் IIIL பிரிவுகால்வாய் மூலம் 2501 ஏக்கரும், இரண்டாவது மண்டலத்திற்கு 11. 725 கி. மீ - 31. 500 கி. மீ. வரை பிரதானகால்வாய் மூலம் 1499 ஏக்கரும் மொத்தம் 4000 ஏக்கர் நிலங்கள் பயனடையும். விவசாய பெருமக்கள் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்கத்துடன் செயல்பட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், நீர்வளத்துறை சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி