கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்க ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு இன்று இப்பள்ளியில் ஆண்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு நடனங்கள் ஆடினர். இதில் திரளான பெற்றோர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.