கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (38) கட்டிட தொழிலாளி. இவர் சம்பவம் அன்று டூவீலரில் கெங்கபிராம்பட்டி முருகன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டூவீலர் மோதி கொண்டன. இந்த விபத்தில் ரவி படு காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.