கிருஷ்ணகிரி மாவட்டம் எக்கூர் கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் (80). நேற்று வீட்டில் அவரது துணிகளை துவைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கீழே விழுந்ததில் அங்கிருந்த கல்லில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.