கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கோட்டம், மத்தூரில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் காலாண்டு பாதுகாப்பு வகுப்பு மத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த பாதுகாப்பு வகுப்பு போச்சம்பள்ளி செயற்பொறியாளர் இந்திரா தலைமையில் உதவி செயற்பொறியாளர் மகாலட்சுமி முன்னிலையில் அனைத்து உதவி பொறியாளர்களும் கலந்து கொண்டு மின் விபத்து எப்படி ஏற்படுகிறது, அதனை எவ்வாறு தடுப்பது மற்றும் பாதுகாப்பு சாதனம் எப்படி பயன்படுத்துவது குறித்து விளக்க உரை ஆற்றினர். அப்போது ஆர்.சி.டி ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் அதனால் மின் விபத்துக்கள் தடுக்கப்படுவதாக தெரிவித்தனர். இதில் 150 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.