எலத்தகிரி புனித அந்தோணியர் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடம்

70பார்த்தது
எலத்தகிரி புனித அந்தோணியர் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடம்
புனித அந்தோணியர் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடம். காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலத்தகிரி புனித அந்தோணியர் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக மக்கள் பங்களிப்புடன் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக தனது பங்களிப்பினையும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் வழங்கி உள்ளார். இதனை அடுத்து பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் பள்ளியின் தாளாளர் தேவசகாயம் தலைமையில் நடைபெற்று, மேலும் இந்த கட்டுமானப் பணியினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பவுண்டேசன் மற்றும் பெல்ட் அமைக்கும் பணியினை துவக்கி வைத்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி