கருவானூர் அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா

53பார்த்தது
கருவானூர் அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா
கருவானூர் அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருவானூர் நடுநிலைப்பள்ளியில் விழா மேடை திறப்பு விழா புரவலர் பெயர் பலகை திறப்பு விழா பள்ளியின் 55 ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஊர்ப்பொதுமக்கள் நன்கொடையாளர்கள் உதவியுடன் ரூ 1 லட்சம் செலவில் கட்டப்பட்ட விழா மேடை திறக்கப்பட்டது.

 ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் மத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் மு. கராமத்துல்லா தொழில் அதிபர் நரேஷ் ஊத்தங்கரை கம்பன் கழக அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி உமா இராஜேந்திரன் PTA தலைவர் தேவன் துணைத் தலைவர் மாரியப்பன் பிரைம்ஓவர்சீஸ் கார்மென்ட்ஸ் நாகராஜ் ராமன் பள்ளிமேலாண்மைக் குழு சரிதா அஞ்சலாதேவி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி