கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள ஜீகூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேந்திரப்பா இவருடைய 24 வயதுடைய மகள் கடந்த 20-ம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து சென்றார் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று பல இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் அவரது தந்தை தளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் (27) மீது சந்தேகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.