இன்று(அக்.5) புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் இன்று காலை மூலவருக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.