ராயக்கோட்டை அருகேயுள்ள எடவனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவருடைய மனைவி புவனேஸ்வரி (29). இந்த நிலையில் கணவன்-மனைவிக்குள் குடும்பப் பிரச்சனை இருந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் புவனேஸ்வரியின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.