கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பரை ஊராட்சி சொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (30). பேக்கரி கடை ஊழியராக இவர் வேலை செய்தார். இவர் சம்பாதித்த சம்பளப் பணத்தை தாய் மங்கம்மாள் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிவசங்கர் அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்துப் புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.