கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஹோட்டல் அருகில் தனியார் பள்ளி வாகனம் மற்றும் டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார், நேற்று நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் குழந்தைகளுக்கு வழங்குப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. பூவதி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டாட்சியர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.