10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

2696பார்த்தது
10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கீரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேவசானப்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் தேடியும் இல்லாததால் பெற்றோர் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் கடத்தி சென்றதாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிங்காரவேலனை போக்சோவில் தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி