கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளதையொட்டி, வெள்ளி விழா கொண்டாடும் பொருட்டு, திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , நேற்று (டிச.30) மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், மாவட்ட ஆட்சியர் மேலாளர் (பொது) மதுசெழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நீதியியல்) கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.