கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி வி. ஜ. பி. நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (64) இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆரோக்கியசாமி கண் ஆபேரேசன் செய்து வந்து வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. இதனால் மன விரக்தியில் காணப்பட்ட அவர் சம்பவம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.