கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அடுத்துள்ள கல்லகுறுக்கி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (43). ரேஷன் கடை ஊழியர் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இதனால் வீட்டில் குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் இவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிகிருஷ்ணன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி இருந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.